சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து! 6 பேர் பலி…27 பேர் காயம்!

Bus - Accident

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர்-குஷிநகர் நெடுஞ்சாலையில் ஜகதீஷ்பூர் அருகே, நின்று கொண்டிருந்த பேருந்து பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை ஐந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சென்று கோரக்பூர்  மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்து குறித்து விசாரிக்கையில், கோரக்பூரில் இருந்து வந்த ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பத்ருனாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜகதீஷ்பூரில் உள்ள மல்லப்பூர் அருகே பேருந்தின் ஒரு டயர் பஞ்சராகி உள்ளது.

காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.! சுகாதார அமைச்சகம்

இந்நிலையில், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு வேறு பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, எதிர்பாராத நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்