75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி, பலர் காயம்!

Default Image

உ.பி.யில் 75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயம். 

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சைதாபாத் பகுதியில் 75 மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

காந்தி தேவி ஜனதா வித்யாலயா பள்ளி மாணவர்களை ஜான்பூரில் இருந்து பிரயாக்ராஜில் உள்ள மங்காருக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, எதிரில் பைக்கில் வந்த இருவரைக் காப்பாற்ற முயன்றபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. பலத்த காயமடைந்த சில மாணவர்கள் எஸ்ஆர்என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்