நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் – 2019 ஆண்டு அறிக்கையை வெளியிட்ட தேசிய குற்றப் பதிவு பணியகம்!

Default Image

 2019 ஆண்டு நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

வருடம்தோறும் தேசிய குற்றப்பதிவு பணியகம் அந்த ஆண்டில் எவ்வளவு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதை தொகுத்து வழங்குவது வழக்கம். அதன்படி கடந்து 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது பெண்களுக்கு எதிரான வழக்கில் 7.3% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 4 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியதும், 2018 ஆம் ஆண்டில் பதிவாகிய வழக்கிலிருந்து இது 7 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த கற்பழிப்பு வழக்குகள் எவ்வாறு உள்ளது என்றால் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது கணவர்களால் உருவாக்கப்பட்ட வழக்குகளாக உள்ளதாகவும் மேலும் இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றப்பிரிவு ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.

மேலும்சாதாரணமாக தெருவில் குடும்பம் இன்றி திரியக்கூடிய பெண்கள் முதல் அரசியல்வாதிகளின் குடும்பத்தில் உள்ள பெண்கள் சினிமா துறையில் உள்ளவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் இந்த கற்பழிப்பு வழக்குகளில் அனைத்து சமூகத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு சென்றுள்ளதாகவும் கடந்து 2017 மட்டும் 2018 ஆம் ஆண்டுகளை கணக்கிடுகையில் 2019ஆம் ஆண்டு மிக மோசமான நிலையில் கற்பழிப்புகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Govt Employees - Protest
Aadhaar - Rahul Gandhi
NASA astronaut Sunita Williams return
Sunita Williams -Crew 9
ab de villiers and virat kohli
sekar babu tvk vijay