இன்று டெல்லியில் இருந்து இயக்கப்பட இருந்த 82 விமானங்கள் ரத்து.! பயணிகள் கடும் அதிருப்தி.!

Default Image

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நாடு முழுவதும் கடந்த 60 நாட்களாக மேலாக அமலில் இருக்கும் 4 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. இந்த உள்நாட்டு விமான சேவைக்கு பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழக அரசு 25 உள்நாட்டு விமானங்களை மட்டுமே தமிழகத்திற்கு இயக்க அனுமதி அளித்துள்ள நிலையில், மும்பைக்கு தினந்தோறும் 50 விமானங்களை மட்டும் இயக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் அனுமதி அளிக்கவில்லை என்பதால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையத்தின் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அம்பன் புயல் பாதிப்பால் கொல்கத்தாவில் வரும் மே 28-ம் தேதி முதல் விமான நிலையச் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பீகார், பஞ்சாப், அசாம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் இன்று டெல்லியில் இருந்து இயக்கப்பட வேண்டிய மற்றும் டெல்லிக்கு வரவிருந்த மொத்தம் 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் கடைசி சில நிமிடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் தங்களின் முக்கிய நிகழ்ச்சிகளை தவறவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்