8 வருட காதல் – திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி!

Default Image

8 வருட காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா எனும் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்மணி தான் சாந்தல். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பள்ளி பருவம் முதல் எட்டு வருடம் காதலித்து வந்துள்ளார். புனேவில் கடந்த 2 வருடமாக இப்பெண் வேலை பார்த்து வருகிறார். அண்மையில் அப்பெண்ணை புனேவில் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்த அவரது காதலன் மூன்று மாதங்களாக பேசாமல் இருந்ததால் காதலனை சந்திக்க முடியாத அப்பெண்மணி கடந்த சில தினங்களுக்கு முன்பு துர்கா பூஜைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது தனது காதலனை சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கேட்டபொழுது அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த சாந்தல் ஏற்கனவே தயாராக கொண்டு வந்து இருந்த ஆசிட்டை காதலன் மீது வீசியுள்ளார். இதனால் அந்த இளைஞன் கண் மூக்கு மற்றும் சுவாசப் பாதை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஆசிட் வீசிய பெண்மணி சாந்தல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain