சாப்பாடு தருவதாக கூறி 75 வயதான மூதாட்டி பலாத்காரம் !

கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள கற்றானம் வெட்டிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமணன்(46). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் லாட்டரி கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி காலை அப்பகுதியில் 75 வயதான மூதாட்டி ஒருவர் அவ் வழியாக ஹோட்டலில் சாப்பாடு வாங்க சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த ரமணன் பேச்சுக் கொடுத்துள்ளார்.
தனது வீட்டிற்கு வந்தால் சாப்பாடு தருவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரமணன் வீட்டிற்கு அந்த மூதாட்டி சென்றுள்ளார். அப்போது வீட்டில் மனைவி, குழந்தை யாரும் இல்லாததால் 75 வயது மூதாட்டியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த மூதாட்டியை சற்று தொலைவில் சென்று விட்டு விட்டார். மூதாட்டி சோர்வாக வந்ததை பார்த்த சிலர் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையை அழுதபடி அந்த மூதாட்டி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கற்றானம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விசாரணை நடத்தி ரமணனனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025