சாப்பாடு தருவதாக கூறி 75 வயதான மூதாட்டி பலாத்காரம் !

Default Image

கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள கற்றானம்  வெட்டிக்கோடு  பகுதியை சேர்ந்தவர் ரமணன்(46). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் லாட்டரி கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி காலை அப்பகுதியில் 75 வயதான மூதாட்டி ஒருவர் அவ் வழியாக ஹோட்டலில் சாப்பாடு வாங்க சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த  ரமணன் பேச்சுக் கொடுத்துள்ளார்.

தனது வீட்டிற்கு வந்தால் சாப்பாடு தருவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரமணன் வீட்டிற்கு அந்த மூதாட்டி சென்றுள்ளார். அப்போது வீட்டில் மனைவி, குழந்தை யாரும் இல்லாததால் 75 வயது மூதாட்டியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அந்த மூதாட்டியை சற்று தொலைவில் சென்று விட்டு விட்டார். மூதாட்டி சோர்வாக வந்ததை பார்த்த சிலர் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையை அழுதபடி அந்த மூதாட்டி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கற்றானம்  போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விசாரணை நடத்தி ரமணனனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts