பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna fire accident

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதில் 7 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் மிகுந்த ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றத்தை உண்டாகியுள்ளது.

தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு விதிகளை சரியாக பின்பற்றாததே இந்த விபத்துக்கு காரணம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்