லேவில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

Default Image

ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக இருந்தது. காலை 7.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இருப்பினும், நிலநடுக்கத்தின் அதிர்வு வலுவாக இல்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் படி, நிலநடுக்கத்தின் மையம் அல்ச்சிக்கு வடக்கே 186 கிமீ தொலைவில் அதாவது சீனாவில் உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்