ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் “தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்.ஈ.டி.யுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.