உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி.!

death

உத்தரபிரதேசம்: ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகரின் புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் சத்சங்கம் (கூட்டு வழிபாடு) நடந்து கொண்டிருந்தது. கூட்டு வழிபாடு முடிந்ததும், கூட்டம் இங்கிருந்து வெளியேறத் தொடங்கியவுடன், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50ஐ எட்டலாம் அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்து எட்டா மருத்துவக் கல்லூயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நெரிசல் ஏற்பட்டபோது, ​​ஹத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தராவ் நகரில் ஒரு மத நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இதுவரை, 23 பெண்கள், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் உட்பட 27 உடல்கள் எட்டா மருத்துவமனைக்கு வந்துள்ளன.

இந்த விபத்து பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 27 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar