கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 1,925 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,474 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,474 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 372 அதிகரித்துள்ளது. மேலும் 603 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 9847 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 13,251 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
unknown node