தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து.. 18 பேர் உயிரிழப்பு.!

ACCIDENT

சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலையில் டெண்டு இலைகளை பறித்துவிட்டு வீடு திரும்பிய போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்..

இதனையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து துணை முதல்வர் அருண் சாவ், தனது எக்ஸ் வலைதள மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் வாகனம் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்