Tag: road accident

கர்நாடகாவில் நடந்த கோர விபத்து! 13 பேர் பலி…2 பேர் காயம்!

கர்நாடகா :  மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் பியாடகி தாலுகாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மினிபஸ் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஹாவேரி மாவட்டம் குண்டேனஹள்ளி கிராசிங் அருகே அதிகாலை 3.45 மணியளவில் மினி பேருந்தில் 17 பேர் பயணம் செய்தனர். அப்போது, புனித யாத்திரைக்காக பெலகாவி மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் […]

#Karnataka 4 Min Read
karnataka accident

உத்தரகாண்ட் வேன் விபத்து : பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் முதற்கட்டமாக பேர் உயிரிழந்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு  வேன் சென்று கொண்டு இருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் என்று மாநில பேரிடர் மீட்புப் […]

road accident 3 Min Read
uttarakhand accident van

உத்தராகண்ட் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! 8 பேர் பலி!!

உத்தராகண்ட் : மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேன் சென்று கொண்டு இருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் என்று மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வட்டாரம் தகவலை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

road accident 5 Min Read
Rudraprayag van Accident

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து.. 18 பேர் உயிரிழப்பு.!

சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் டெண்டு இலைகளை பறித்துவிட்டு வீடு திரும்பிய போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.. இதனையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து துணை முதல்வர் அருண் […]

#Accident 2 Min Read
ACCIDENT

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற அந்த சுற்றுலாப் பேருந்தில் மொத்தம் 64 பேர் பயணித்துள்ளனர். தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் சுமார் 20 பேர் […]

Bus Fire 3 Min Read
bus fire - Haryana

மெக்சிகோ புனித யாத்திரையில் சாலை விபத்து… 14 பேர் உயிரிழப்பு.!

Mexico : மத்திய மெக்சிகோவில் புனித யாத்திரை சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு முக்கிய புனித தளங்களில் ஒன்றாக விளங்குகிறது தென்மேற்கில் உள்ள சல்மா கிறிஸ்தவ தேவாலயம். இந்த ஆலயத்திற்கு புனித யாத்திரையாக மத்திய மெக்சிகோ குவானாஜுவாடோ மாநிலத்தில் இருந்து அப்பகுதி மக்கள் பேருந்தில் புறப்பட்டனர். அந்த பேருந்தானது, கபூலின் – சல்மா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் […]

#Mexico 3 Min Read
Mexico Road Accident

#Breaking:டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு!

மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) உயிரிழந்தார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,விபத்தில் இறந்த டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு முதலைமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

#CMMKStalin 2 Min Read
Default Image

“வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி” – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி  மோதியதில் விஸ்வா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#Shocking:தமிழக இளம் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் மரணம் – மத்திய அமைச்சர் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு,ஷாங்பங்லாவில்,சாலை வளைவில் எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,தீனதயாளன் சென்ற காரை […]

83rd Table Tennis Tournament 3 Min Read
Default Image

சத்தீஷ்கரில் ஆட்டோ மீது மோதிய எஸ்யூவி கார்: 9 பேர் பலி..!

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று பிற்பகல் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கோண்டாகான் தெஹ்சில் அமைந்துள்ள போர்கான் என்ற கிராமத்தில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 30 இல் ஒரு ஆட்டோ ரிக்சா மீது ஒரு எஸ்யூவி மோதியுள்ளது. இந்த ஆட்டோ […]

#Chhattisgarh 5 Min Read
Default Image

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது – அப்போலோ மருத்துவமனை அறிக்கை!

ஹைதராபாத் கேபிள் பாலத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்ட நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிவிப்பு. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள துர்காம்சேரு கேபிள் பாலத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுயநினைவில்லாமல் இருந்த தரம் தேஜ் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், பைக் விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்-யின் உடல்நிலை […]

#Hyderabad 3 Min Read
Default Image

வேனும், தண்ணீர் லாரியும் மோதி கோர விபத்து – 4 பெண்கள் உயிரிழப்பு..,15 பேர் படுகாயம்!

பெண்களை பணிக்கு அழைத்து சென்ற தனியார் வேன், தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் சில்லாநத்தம் பிரதான சாலையில் தனியார் நிறுவன வேனும், தண்ணீர் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்ததாகவும், 15 படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதியமுத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற வேன், எதிரே வந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து […]

dead 3 Min Read
Default Image

கானாவில் ஏற்பட்ட சாலை விபத்து: 10 பேர் பலி..!

கானாவின் தெற்கு பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானாவில் அமைந்துள்ள அக்ரா-கேப் கோஸ்ட் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கொமோவா மேம்போங் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வின்னிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு […]

10 death 2 Min Read
Default Image

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்..!வேஷ்டியை கிழித்து முதலுதவி செய்த திமுக எம்.எல்.ஏ..!

சாலை விபத்தில் கால் முறிவுற்ற நிலையில் வலியால் துடித்த இளைஞருக்கு தனது வேஷ்டியை கிழித்து திமுக எம்.எல்.ஏ. ஆன மருத்துவர் முதலுதவி செய்துள்ளார். பனங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயக்குமார். இவர் விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது ராகவன்பேட்டை எனும் இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கால் முறிவுற்று வலியால் துடித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் வலியால் துடித்த இளைஞரை கண்டுள்ளார். உடனே […]

#DMK 3 Min Read
Default Image

சேலத்தில் சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளைஞர் – அதிரவைத்த சம்பவம்..!

சேலத்தில் தனது சகோதரியை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு காரில் வேகமாக சென்ற இளைஞர் பல சாலை தடுப்புகளை இடித்து தள்ளியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர். இவர் ஒரு கட்டிட தொழிலாளர். இவரின் சகோதரிக்கு கொரோனா பாதிப்பு காரணமாக திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சகோதரியை அழைத்துக்கொண்டு அவரது பலேனோ காரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அப்போது, சகோதரியை அடிக்கடி கவனித்து […]

#Salem 4 Min Read
Default Image

காஷ்மீரில் கோர விபத்து !பேருந்து கவிழ்ந்து 33 பேர் பலி,22 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33பேர் உயிரிழந்துள்ளனர். கெஷ்வான் என்ற பகுதியிலிருந்து கிஸ்த்வார் நோக்கி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#JammuandKashmir 1 Min Read
Default Image

ஆந்திராவில் டிப்பர் லாரியின் டயர் வெடித்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியதில் 8 பேர் பலி; 10 காயம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே டிப்பர் லாரியின் டயர் வெடித்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தின் காரணமாக கூலி தொழிலாளர்கள் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Andhra Pradesh 1 Min Read
Default Image

பிலிப்பைன்ஸ்சில் சாலை விபத்தில் 20 பேர் பலி!தொடரும் சோகம் …

வடக்கு பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் வழிபாட்டுக்காக பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த வேன் மீது பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியதில் 20 பேர் பலியாகியுள்ளனர். கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த விபத்து வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “லா யூனியன் மாகாணத்தில் ஆகூ என்ற நகரில் விடிகாலை நடந்த் இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் சிறிய வேனில் பயணித்தவர்கள். மேலும் 10 வேன் […]

philipains 3 Min Read
Default Image

குடித்து விட்டு வண்டி ஓட்டினால் 7 ஆண்டு சிறை : மத்திய அரசு

குடித்துவிட்டு வண்டி ஒட்டினால் டிரன்க் அண்ட் டிரைவ் என வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும். அப்படி இருந்தும் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. இதனால் அரசு சட்டத்தை மேலும் வலுபடுத்தி உள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால், வண்டி ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்க பட்டுள்ளது. விபத்துகளினால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்த சட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளது. மேலும் வாகன […]

#BJP 2 Min Read
Default Image

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரி ஆம்னி வேன் மோதிய விபத்து : 4 பேர் உயிரிழப்பு

திருப்பூர்; மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் காங்கயம் ரோடு வி.எஸ்.ஏ. நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி , மாணிக்கராஜ். இவர்கள் சகோதரர்கள். இருவரும் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தனர். கார்த்தி புதிதாக ஆம்னி வேன் வாங்கி இருந்தார். இதற்கு உதிரி பாகங்கள் வாங்க ஆம்னி வேனில் கோவை வந்தனர். அதன்பிறகு  சகோதரர் மாணிக்கராஜ் மற்றும் அவரது  […]

#Thiruppur 3 Min Read
Default Image