டெல்லி கலவரம் தொடர்பாக 167 வழக்குகள் பதிவு.! 885 பேர் கைது.!

Default Image

டெல்லியில் கலவரம் தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும்  இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 42 பேர் பலியானதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதையடுத்து போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வதந்திகள் பரவுவதை தடுக்க பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்