ஜம்மு-காஷ்மீரில் பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து 150 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 15 பேர் உயிரிழப்பு.!

Jammu and Kashmir Bus Accident

ஜம்மு-காஷ்மீர் : பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் இருந்து தவறி, பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி ஒரு 150 பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த விபத்து ஜம்மு-பூஞ்ச் ​​நெடுஞ்சாலை டாங்லி மோர் அருகே சோகி சோராவில் நடந்ததுள்ளது. பேருந்து 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் உருண்டதாக சொல்லப்படுகிறது.  தற்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் ஜம்முவில் உள்ள அரaசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தானது ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில் இருந்து, பக்தர்களை ஏற்றி கொண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி பகுதியில் உள்ள கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்