5 வயது சிறுமியயை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன் கைது ..!

Default Image

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி என்னும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய 12 வயது சிறுவன் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த சிறுவன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டோர்பா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சிறுவன் ராஞ்சி பகுதியில் உள்ள சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்