டெல்லியில் போலீஸ் போக்குவரத்து சாவடியில் பேருந்து விபத்து..!-ஒருவர் பலி..!

Default Image

டெல்லியில் போலீஸ் போக்குவரத்து சாவடியில் கிளஸ்ட்டர் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று, வடக்கு டெல்லியில் உள்ள சராய் ரோஹில்லா பகுதியில் கிளஸ்ட்டர் பேருந்து ஒன்று போலீஸ் போக்குவரத்து சாவடியில் மோதியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 4 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாவது, இரவு 9 மணியளவில் கமல் டி-பாயிண்டில் ஒரு பேருந்து போலீஸ் போக்குவரத்து சாவடியில் மோதி, பின்னர் மரத்தில் மோதியது.

இதில் பொதுமக்களில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 4 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் பேருந்திலிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் இந்த ஓட்டுனரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சாராய் ரோஹில்லா காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்