அயோத்தி ராம் கோயில் விழாவில் 1.25 லட்சம் ‘ரகுபதி லட்டு’ விநியோகம்.!

Default Image

நாளை நடைபெறவுள்ள ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும்

அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்டமான ராமர் கோயில் விழாவில் பிரதமர் அடிக்கள் நாட்டவுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய பிரமுகர்கள் 175 பேருக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை நாளை அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுக்களில், 51,000 லட்டுக்கள் கோயிலின் அஸ்திவார விழாவை முன்னிட்டு ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ANI செய்தி நிறுவனிடம் பேட்டியளித்த ஆச்சார்யா கிஷோர் குணால் “அயோத்தி ‘ பூமி பூஜை ’நிகழ்ச்சியில் 1,25,000 லட்டுகளை ‘ ரகுபதி லட்டு ’என்ற பெயரில் விநியோகிக்கப்படும். 51,000 லட்டுக்கள் ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படும்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் மீதமுள்ள லடூக்கள் பீகாரில் உள்ள சீதாமாரியில் உள்ள ஜானகியின் பிறந்த இடத்திலும், சுமார் 25 புனித யாத்திரை இடங்களிலும் உள்ள கோயில்களுக்கு அனுப்பப்படும்.  நாளை பீகாரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராம் மற்றும் ஹனுமான் பக்தர்களிடையே லட்டுகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த லட்டுக்கள் தூய மாடு நெய் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்று குணால் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்