தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோன பாதிப்பு உறுதி.
உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்தாகவும் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு ஓய்வில் உள்ளேன் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். மேலும் எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினமும் அதிகரித்து வரும் கொரோனாவால் சில முக்கிய நபர்கள் சில நாட்களாக இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்.