தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம் வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையினர், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையை சத்யமூர்த்தி என்பவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் .என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாகஅ விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் காலத்தில் பணிபுரியும் அணைத்து காவலர்களுக்கும் முக கவசம் மற்றும் முகம் முழுவதையும் மறைக்கும் ஷீல்டு வழங்க வேண்டும் என்றும், காவலர்கள் இதை பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.