தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை திட்ட அரசாணை வெளியிட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த (எம்.பி.சி) பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில் வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க ரூ.16.75 கோடி நிதி விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஆண்டுக்கு வருமானம் ரூ.72,000 உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த (எம்.பி.சி) மாணவியருக்கு மட்டும் கல்வி ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node