#BREAKING: மேலும் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Holidays have been announced for schools and colleges in 9 districts tomorrow.

நாளை 9 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரம்பலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, அரியலூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.