பூச்சி மருந்து குடித்து தற்கொலை – மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர்!

The body of the student who committed suicide by drinking pesticide in Thanjavur was received by his parents.

தஞ்சையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி ஜனவரி 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 19ம் தேதி உயிரிழந்தாா்.

மதம் மாறுமாறு கூறி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் புகார் மனு அளித்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மருத்துவமனையிலுள்ள மாணவியின் உடலை வாங்குவதற்கு அவரது பெற்றோா் மறுத்துவிட்டனா். இந்த நிலையில், மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி க்கு மாற்ற கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்தது.

அப்போது , உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தலை தொடர்ந்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர். பெற்றோர் வாக்குமூலத்தை பதிவு செய்து தஞ்சை நீதித்துறை நடுவர் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த நிலையில், மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை செய்து தர காவல்துறைக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.