வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவிலின் அதிசயம்..

Shiva

பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார்.

கோவிலின் வரலாறு

இரண்டு முனிவர்களுக்கு இடையே இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிவபெருமான் இரண்டுமே சிறந்தது தான் என தீர்ப்பு வழங்கினார் இருவருக்கும் பொதுவான கருத்தை கூறியதால் இவர் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.

இந்த திருக்கார்த்திகைக்கு இந்த மாதிரி விளக்கு ஏற்றுங்கள்… !சூப்பரா இருக்கும்…

முனிவர்கள் ஈசனிடம் இங்குள்ள பக்தர்களுக்கு தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிவபெருமானும் அங்குள்ள வெள்ளாள மரத்திலே ஐக்கியமானார்.

கோவிலில் சிறப்பு

இங்குள்ள வெள்ளாள மரத்தின் இலை பிரசாதமாக பத்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த இலைகளை பறித்துச் சென்று பூஜை அறை மற்றும் பண பெட்டிகளில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்குள்ள ஆலமரத்திற்கு தொட்டில் கட்டி வழிபட்டால் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

முனிவர்களுக்கு சிவபெருமான் கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று காட்சியளித்ததால் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதுவும் சிதம்பரத்தில் அர்த்த சாம பூஜை நடந்து முடிந்ததும் இரவு 10 மணிக்கு மேல் இங்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.

இக்கோவில் திறக்கப்பட்ட பின் மரத்தின் பகுதியை வெண்ணிற துணியால் மறைத்து முன்பக்கம் சிவலிங்கமாக அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்த முடித்த பின்பு சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்தப்படுகிறது. தைப்பொங்கல் அன்று மட்டும் அதிகாலை முதல் மாலை 7 மணி வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இறைவனின் மேனியில்  சூரிய ஒளி படுவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

இது தவிர சிவராத்திரி, திருக்கார்த்திகை, அண்ணா அபிஷேகம் போன்ற எந்த பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இங்கு நடை அடைத்திருக்கும் போது அங்குள்ள கதவுக்கு பூஜை நடத்தப்படுகிறது பக்தர்கள் கதவையே சிவனாக பாவித்து மாலை சாத்தி தரிசித்து செல்கிறார்கள். எனவே ஒருமுறை திங்கள் அன்று பொது ஆவுடையார் கோவிலுக்கு வந்து தரிசித்து ஈசனின் அருளை பெற்று செல்லுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh