சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினி மீது நம்பிக்கை இழந்த மனோஜ்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 13] எபிசோடில் ரோகினி மனோஜிடம் ஒரு லட்சம் கேட்கிறார் ..மனோஜ் தர மறுக்கிறார். ஸ்ருதி கொடுத்த சூப்பரான ஐடியா..

Muthu,Ravi (1)

சென்னை -சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 13] எபிசோடில் ரோகினி மனோஜிடம் ஒரு லட்சம் கேட்கிறார் ..மனோஜ் தர மறுக்கிறார். ஸ்ருதி கொடுத்த சூப்பரான ஐடியா..

முத்து செல்வத்துக்காக கூட இருக்கிற ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் பணம் கேட்கிறார் அவங்களும் இருக்கிற கொஞ்சம் பணத்தை  கொடுத்து விடுகிறார்கள்.. இப்போ வித்யா ரோகினிக்கு கால் பண்ணி வீட்டுக்கு அட்வான்ஸ் கேக்குறாங்க.. ரோகினியும் எங்கிட்ட இப்ப அமௌன்ட் இல்லை   லோனுக்கு அப்ளை பண்ண அதுவும் கிடைக்கல அப்படின்னு சொல்றாங்க. இப்போ வித்யா ரோகினிய கிண்டலா அப்போ துபாய்ல இருக்க உன் ஹஸ்பண்டு கிட்ட கேளுனு  சொல்றாங்க.. ரோகிணியும் கோவமா அன்னைக்கு துபாய்ல இருக்காருன்னு  சொன்னதாலதான்   ஹவுஸ் ஓனர்  எதுவுமே கேட்கல அப்படின்னு சொல்றாங்க. இப்போ மனோஜ் அங்க வராரு மனோஜ்க்கு  துபாய் என்று விழுந்துருது யார் இருக்கா துபாய்ல அப்படின்னு கேக்குறாரு .

ரோகினி சமாளிக்க ஆரம்பிக்கிறாங்க என் பிரண்டோட ஹஸ்பண்ட் துபாய்ல இருக்கிறாரு என் பிரண்டுக்கு இப்போ ஒரு லட்சம் பணம் தேவைப்படுது மனோஜ்.. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்றியா அப்படின்னு கேக்குறாங்க ..அதுக்கு மனோஜ்  சொல்லுறாரு இது ஹெல்ப் இல்ல கடன். சரி நான்  அவ கிட்ட  என் ஹஸ்பண்ட் கொடுப்பார்னு  பிராமிஸ் வேற பண்ணிட்டேன்..  ஆனா மனோஜ் கொடுக்கவே மாட்டேங்குறாரு ..அப்படியே நம்ம முத்து மீனா கதை தான் இங்கேயும் நடந்துட்டு இருக்கு.. ரோகினி கொஞ்சம் கோபமா அந்த ஜீவா கிட்ட இருந்து நான் தானே அவ்வளவு பணத்தையும் உன்கிட்ட வாங்கி கொடுத்தேன் என் கண்ணில் பட்டதால் தானே இது நடந்துச்சு அப்படின்னு சொல்லி பாக்குறாங்க .

manoj,Rohini (7) (1)

அதுக்கு மனோஜ் உனக்கு கேட்டிருந்தா நான் கொடுத்திருப்பேன் ஆனா உன் பிரண்டுக்கு கேக்குற அப்படின்னு சொல்றாரு. இப்போ ரோகிணி  அய்யய்யோ நம்ம இத பத்தி இப்படி யோசிக்காமல் விட்டுட்டோமே அப்படி நினைச்சுட்டு சரி இப்ப நான் கேட்கிறேன் எனக்காக குடு என் பிரண்டுக்கு அப்படின்னு சொல்றாங்க ஆனா மனோஜ் நம்பாம என்னால கொடுக்க முடியாதுன்னு சொல்லிறாரு.. மீனா கிச்சன்ல இருகாங்க அங்க ஸ்ருதியும்  ரோகிணியும்  வராங்க.. அதே மாதிரி மாடில முத்து சோகமா நின்னுட்டு இருக்காரு . ரவி வர்றாரு என்னடா சோகமா இருக்க அப்படின்னு கேக்குறாரு.. உடனே முத்து உன்கிட்ட பணம் இருந்தா குடுக்குறியா ன்னு கேக்குறாங்க. அந்த டைம்ல அங்கே மனோஜ் டேய் ரவி எனக்கும் கீழே இதே பிரச்சினை தான் பணம் எல்லாம் கொடுக்காத அப்படின்னு சொல்றாரு .

கீழ ரோகினி ஸ்ருதி கிட்ட பணம் கேட்டுட்டு இருக்காங்க ..அதே மாதிரி மீனா பணம் கொடுக்க வேண்டாம் என்ற மாதிரி சொல்றாங்க. ஒருத்தர் பணம் கேட்டா ஏன் எதுக்கு சரியான தேவைக்கு கேக்குறாங்களானு தெரிஞ்சுக்கணும்  அப்படின்னு சொல்லவும்  ரோகிணிக்கு கோவம் வருது . இதுல ரெண்டு பேருக்குமே வாக்குவாதம் வருது . அதே மாதிரி மாடிலயும் மனோஜ்க்கு முத்துவுக்கும்  வாக்குவாதம் வந்துருது. இப்போ கீழே சுருதி சமாதானப்படுத்துற மாதிரி ரவியும் சமாதானப்படுத்தி ஒரு ஐடியாவை சொல்றாரு. நீங்க பணத்தை சும்மா கொடுக்காம வட்டிக்கு கொடுக்கலாம்ல ..இதே ஐடியா தான் கீழே சுருதியும் சொல்றாங்க ..மீனாவும்  ரோகிணியும் ஐடியா எனக்கு புடிச்சிருக்கு அப்படின்னு சொல்லிடறாங்க. ஆனா  முத்து  இதெல்லாம் சரிவராது நானே பார்த்துக்கொள்கிறேன் டா அப்படின்னு சொல்லிடறாங்க..

ரோகினி  ரூம்ல  மனோஜ் கிட்ட கொஞ்சம் ஓவரா பேசிட்டேன் அப்படின்னு யோசிக்கிறாங்க.. இப்ப மனோஜ் உள்ள வராரு என்ன ரோகினி இன்னும் கோவமா  இருக்கியா? ரோகிணி வேகமா இல்லை என் ஹஸ்பண்டு எனக்கு தேவையானதெல்லாம் பண்றாரு நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் அப்படின்னு நக்கலா சொல்றாங்க.. நீதான்  நீ என்னை அடிக்கடி பழைய விஷயத்தை சொல்லி ஹர்ட் பண்ணிட்டு இருக்க அப்படின்னு மனோஜ் சொல்ல அதுக்கு ரோகினி நீ என்ன நம்பவே மாட்டுற  மனோஜ் . அதுக்கு மனோஜ்  சொல்றாரு நம்ம  ஒருத்தர ரெம்ப  நம்பி அவங்க நம்மளை ஏமாத்திட்டாங்கன்னா திரும்பவும் யார் மேலயும் நம்பிக்கை வராது ரோகிணி.. ஆனா இப்ப நான் நம்புறது உன்னையும் அம்மாவையும் தான்.   நீங்க ரெண்டு பேரும் தான்  நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க அப்படின்னு சொல்றாரு..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்