சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவின் வலையில் சிக்கிய விஜயா மனோஜ்..

sirakadikka asai 15

சிறகடிக்க ஆசை இன்று-  சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஜூலை15 ] எபிசோடை இங்கே காணலாம்.

அண்ணாமலை சோகமா வீட்ல நடக்கிற பிரச்சனையை பத்தி யோசிச்சிட்டு இருக்காரு .இப்போ ரவியும் சுருதியும் வீட்டுக்கு வராங்க.. என்னாச்சுப்பா ஏப்பா இவ்வளவு சுகமா இருக்கீங்கன்னு கேக்குறாங்க ..அதுக்கு அண்ணாமலையும் வீட்ல நடக்கிறது எல்லாம் பாத்தல்ல அப்படின்னு சொல்றாங்க ஸ்ருதி  சொல்றாங்க அதுக்கு நீங்க  என்ன அங்கிள் பண்ணுவீங்க..

ரெண்டு பேருமே அண்ணாமலை சமாதானப்படுத்துறாங்க. முத்து வீட்டுக்கு வராரு வந்து கதவு வாசலில் நின்று மந்திரத்தை சொல்றாரு.. இத பாத்த எல்லாருமே ஷாக் ஆகி நிக்கிறாங்க என்னடா இவன் புதுசா என்னென்னமோ பண்றான் அப்படின்னு ஒண்ணுமே புரியாம இருக்காங்க. இப்ப வீட்டுக்குள்ள வந்த முத்து அந்த எலுமிச்சம் பழத்தை கையில எடுத்து விரிச்சிட்டு மறுபடியும் மந்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார் இப்போ அத பூஜை ரூமுக்கு எடுத்துட்டு போக போறாரு.

விஜயா என்னங்க  பண்ணிட்டு இருக்கிறான் அப்படின்னு கேக்குறாங்க மீனாவும் ஒன்றுமே புரியாமல் என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க ..அதுக்கு முத்து சொல்றாரு நம்ம வீட்ல நகை மாறுச்சுல்ல அதை யாரு எடுத்தாங்க அப்படின்னு கண்டுபிடிப்பதற்காக தான் ஒரு சாமியார் கிட்ட போனேன் .அவரும் இந்த எலுமிச்சம்பழத்தை மாந்துருச்சு  கொடுத்து இருக்கிறார்.

vijaya,manoj

24 மணி நேரத்துக்குள்ள யாரு நகை எடுத்தார்களோ அவங்களுக்கு வாய் கோணிக்கிறோம் அப்படின்னு சொல்லி இருக்காரு அப்புறம் இத பூஜை ரூம்ல வைக்க சொல்லி இருக்கிறார் என்று பூஜை ரூமுக்கு எடுத்துட்டு போறாரு. இதைக் கேட்ட விஜயாக்கும் மனோஜ்க்கும் பயன் கெளம்பிருது. என்னங்க கண்டதையும் வீட்டுக்குள்ள எடுத்துட்டு வந்து வைக்கிறான்  ஏதாவது ஒன்னு கிடக்க ஒண்ணு ஆச்சுனா  என்ன பண்றது அப்படின்னு  அண்ணாமலை கிட்ட சொல்றாங்க.

இது தப்பு பண்ணவங்களுக்கு மட்டும்தான் இந்த தண்டனை ஏன் நீங்க பண்ணுனீங்களா அப்படின்னு முத்து கேக்குறாரு இல்ல அப்படினு விஜய சொல்லுறாங்க  . இப்ப மனோஜ் விஜயாவும் ரூம்ல போய் கதவை சாத்திட்டு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பாத்துக்கிறாங்க .அவங்களோட பிரம்மைக்கு ஒவ்வொருத்தரோட வாயும் கோணிட்ட மாதிரி இருக்கு. இரண்டு பேருமே பயந்துட்டு கதவை திறக்கலாம்னு போறாங்க அப்ப ரோகிணி வந்து ஆன்ட்டி நீங்க என்ன பண்றிங்க அப்படின்னு கேக்குறாங்க.

ஏங்க வாய் கோணைக்குருச்சுமா அப்படின்னு சொல்லவும் ரோகிணி சொல்றாங்க இல்ல ஆன்டி   நீங்க நல்லா தான் இருக்கிறீங்க அப்படின்னு சொல்லவும்.. இரண்டு பேருமே வாயை தடவி பார்த்துக்கொள்கிறார்கள் எதுவுமே ஆகலைன்னு தெரிஞ்சதும் பயத்திலேயே அவங்க ரூமுக்கு கிளம்புறாங்க மனோஜ் ரோகிணி கிட்ட ரோகிணி எனக்கு ரொம்ப பயமா இருக்கு  அப்படின்னு சொல்றாரு. அவர் சும்மா ஏதோ சொல்றாரு அதெல்லாம் நீ நம்பாதே அப்படின்னு சொல்றாங்க. அப்படியா ரோகிணி ஆனாலும் எனக்கு பயமாவே இருக்கு .

meena ,rohini

அதுக்கு ரோகிணி இருந்துட்டு பயம்தான் உன்னோட முதல் எதிரியே நீ பயப்படாம இருந்தாலே போதும் அப்படின்னு சொல்றாங்க. இப்ப முத்துவும் மீனாவும் கிச்சன்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க ..என்னங்க நீங்க பயங்கரமான ஆளா இருக்கீங்க என்கிட்ட கூட நீங்க சொல்லாம எந்த சாமிகிட்ட  போய் பார்த்தீங்க அப்படின்னு கேக்குறாங்க. அதுக்கு முத்து  சொல்றாரு முத்தானந்தா சாமியார் அப்படின்னு சொல்றாரு அது யாருங்க அப்படின்னு கேட்கிறாங்க.

இதோ உன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்கிறான் பாரு அப்படின்னு சொல்லவும் என்னங்க சொல்றீங்க அது அண்ணாச்சி கடையில் வாங்கினேன் எலுமிச்சம் பழந்தான் நான் தான் சும்மா அவனை பயமுறுத்துவதற்காக இந்த மாதிரி சொல்லி வச்சிருக்கேன் . உடனே மீனா சொல்றாங்க இதனால எதுவும் பிரச்சனை வந்திடாதே அப்படின்னு கேட்குறாங்க .

இல்ல இல்ல அதெல்லாம் ஆகாது மனோஜ்  சின்ன வயசுல இருந்தே பயப்படுவான்  கண்டிப்பா அவன் எடுத்திருந்தா பயத்திலேயே வந்து ஒத்துக்க போறான் அப்படின்னு சொல்றாங்க. சரி பார்க்கலாம் அப்படின்னு சொல்றாங்க. இப்ப ஸ்ருதி ரூம்ல உட்கார்ந்து அந்த எலுமிச்சம்பழத்தை பத்தி யோசிச்சிட்டு இருக்காங்க .ரவி வர்றாரு என்ன சுருதி ஏதோ யோசித்து இருக்க அப்படின்னு கேக்குறாங்க  அந்த எலுமிச்சம் பழத்தை பத்தி தான் யோசிக்கிறேன்.

bharvathi (1)

என்ன நடக்கப் போகுதுன்னு எனக்கு இங்க இருந்து பாக்கணும்னு ரொம்ப ஆவலா இருக்கு அப்படின்னு சொல்றாங்க. எங்க ஊர்ல கூட இந்த மாதிரி எல்லாம் செய்வாங்க .ஒரு தடவை எங்க அப்பாவோட ஆபீஸ்ல பணம் காணாமல் போச்சு அப்பா அந்த எலுமிச்சம் பழத்தை மந்திரிச்சு வச்சு பணம் கிடைச்சிடுச்சு அப்படின்ற மாதிரி சொல்றாங்க. இப்போ மீனா  கிராஸ் ஆகுறாங்க உடனே அதை பார்த்த சுருதி  இங்க வாங்க அப்படின்னு உள்ள கூப்பிட்டு கதைவ  அடைச்சுறாங்க  .

அந்த எலுமிச்சம் பழத்தை பற்றி விசாரிக்கிறாங்க. எந்த சாமியார் கிட்ட  வாங்கினாங்க முத்து அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு மீனாவும் உண்மைய சொல்லிடறாங்க. இல்ல அவரை பயமுறுத்துவதற்காக தான் இந்த மாதிரி பண்ணி இருக்கிறார் உடனே ஸ்ருதி அப்படியா இது கூட நல்லா இருக்குதே ஆனா இத நான் வீட்ல இருந்து பார்க்க முடியாது .ஏதாச்சும்னா  எனக்கு கால் பண்ணுங்க மீனா அப்படின்னு சொல்றாங்க.

இப்ப மனோஜ் பயத்துல தூக்கம் வராமல் அங்கே இங்கே நடக்கிறார் அதோட இன்னைக்கு கூட எபிசோடு முடிந்தது. நாளைக்கான ப்ரோமோல பார்வதி மனோஜ் விஜயா மூணு பேரும் ஒரு சாமியார் கிட்ட போறாங்க .இப்ப விஜய் அந்த சாமியார்  கிட்ட  இந்த மாதிரி என்னோட  பையனோட நகையை எடுத்து நாங்க மாத்தி வச்சிட்டோம். அந்த பையன் வந்து இப்ப எலுமிச்சம்பழத்தை மந்திருச்சு  கொண்டு வந்து வச்சிருக்கறாரு.

அதனால வாய் வேற கோனிரும் அப்படின்னு சொல்றாங்க உண்மையாவே அப்படி நடக்குமா அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு அந்த சாமியார் சொல்றாரு நீங்க தப்பு வேற பண்ணி இருக்கீங்க கண்டிப்பா நடக்கும் அப்படின்னு சொல்லவும் இரண்டு பேருமே பயந்துட்டு இருக்காங்க .. நாளைக்கு என்ன நடக்குதுன்னு நாளைக்கு எபிசோடில்  தெரிந்து கொள்வோம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்