சிறகடிக்க ஆசை சீரியல்.. கலவரமாக மாறிய அறுவதாம் கல்யாணம்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[செப்டம்பர் 16] எபிசோடில் அறுவதாம் கல்யாணத்தில் ஏற்பட்ட மோதலால் செல்வத்தின் உறவினரை பளார் என அறைந்தார் முத்து.

Selvam,Muthu (1)

சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[செப்டம்பர் 16] எபிசோடில் அறுவதாம் கல்யாணத்தில் ஏற்பட்ட மோதலால் செல்வத்தின் உறவினரை பளார் என அறைந்தார் முத்து.

முத்து செல்வத்திடம் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார்.. அதற்கு செல்வம் வாங்க மறுக்கிறார்.. ஏதோ நடந்திருக்கு எங்கிட்ட நீ மறைக்கிற அப்படின்னு முத்து கேக்குறாரு .. செல்வம்  அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. உனக்கு ரூம் கட்ற செலவு இருக்கு  முத்து அப்படின்னு சொல்லிடுறாரு.. உடனே முத்து என்ன பத்தி முழுசா தெரிஞ்சா ஒரே ஆளு நீ தான் உன்கிட்ட நான் எதையுமே மறைச்சதில்லை ஆனா நீ என்கிட்ட மறைக்கிற அப்படின்னு சொல்லவும்  செல்வம் உண்மைய சொல்ல ஆரம்பிச்சிடுராறு .. சிஸ்டர் வந்தாங்க .. முத்து சொல்லுறாரு  நெனச்சேன் அவ வேலையா தான் இருக்கும் இது.. எதுக்கு என் புருஷன் கிட்ட காசு வாங்குறைன்னு  கேட்டாளா ?அப்படின்னு கேக்குறாரு .

அதுக்கு செல்வம்  அவங்க அப்படி சொல்லல நாம எல்லாரும் தினக்கூலி தேவையில்லாம பணத்தை செலவு பண்ண கூடாது கொஞ்சம் பார்த்து தான் செலவு பண்ணனும் அப்படின்னு தான் சொன்னாங்க அவங்க சொன்னதும் கரெக்ட் தானே முத்து.. ஆனா முத்து எதையுமே காதில் வாங்காம  பணத்தை எடுத்து நீட்டுறாரு இப்ப நீ இதை வாங்கலைன்னா இனிமே எல்லாமே முடிஞ்சு போச்சு அப்படின்னு சொல்றாரு செல்வமும் வேற வழி இல்லாம பணத்தை வாங்கிக்கிறாரு. முத்து  கோவமா மீனவ மாடிக்கு கூட்டிட்டு போயி நீ செல்லத்தை போய் பார்த்தியானு கேக்குறாங்க.. மீனா பார்த்தேன்னு சொல்லிடறாங்க.. என் புருஷன் கிட்ட பணம் வாங்க கூடாதுன்னு சொல்ல போனியா?. உனக்கு அசிங்கமா இல்லையா அப்படின்னு கேக்குறாரு.

நான் ஒன்னும் காசு போயிரும்னு சொல்லல தேவையில்லாத செலவு வேண்டாம்னு  தான் சொல்லி இருந்தேன் இப்ப ரூம் கற்றது தான் நமக்கு ரொம்ப முக்கியம் அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு முத்து ஓ அந்த அளவுக்கு ரூம் கற்றது உன் தலை மேல ஏறி உக்காந்துருச்சா அப்படின்னு கேக்குறாரு.. இனிமே என் பிரெண்ட்ஸ் குள்ள நீ வராத.. என்னோட அம்பதாயிரம் எடுத்து நான் செல்வத்துக்கிட்ட கொடுத்துட்டேன்னு சொல்லிடுறாரு ..அதுக்கு மீனா யார கேட்டு கொடுத்தீங்க.. அது என்னோட பணம்னு முத்து  சொல்ல உங்க அண்ணன் பண்ணுன மாதிரி தானே நீங்களும் பண்ணி இருக்கீங்க .மீனா சொல்ல கோவத்துல  முத்து மீனாவ அடிக்கப் போறாரு அவன் கூட என்ன சேர்த்து வச்சு பேசிட்டல்ல.. அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.. இப்போ காலையில முத்து அறுபதாம் கல்யாணத்துக்கு கிளம்புறாரு.

muthu,meena (12) (1)

அண்ணாமலை கிட்ட சொல்லிட்டு போறாரு ..என்னடா நீ மட்டும்  தனியா போறியா மீனாவையும் கூட்டிட்டு போன்னு சொல்லவும் மீனாவும் அந்த இடத்துல வந்து நிக்கிறாங்க முத்து அவங்கள பார்த்து முறைச்சுட்டே இருக்குறாரு.. இப்ப மீனாவும் எனக்கு தெரியாது மாமா ..சரி நான் கிளம்பி போயிட்டு வரேன் மாமான்னு சொல்லிட்டு ரெண்டு பேருமே கிளம்பி போறாங்க. இப்போ மீனா கிட்ட முத்து அங்க வந்து உன்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு சொல்றாரு. அதுக்கு மீனா அந்த அளவுக்கு நான் ஒன்னும் இங்கீதம்  தெரியாத ஆள் இல்லைங்க.  இப்ப செல்வத்தோட மனைவி ரெண்டு பேரயும்  வரவேற்கிறாங்க.. ஆனா செல்வம் ஃபுல்லா குடிச்சிட்டு சரக்க அண்டாவுல கலந்து  வச்சுட்டு என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு. இப்ப முத்துவை பார்த்ததும் டேய் வாடா முத்து வா.. வா.. ன்னு  போதையில் கூப்புடுறாரு .

இத பார்த்தா முத்துக்கு ஷாக் ஆயிருச்சு மீனா சொன்னது கரெக்டா தானே போச்சு அப்படின்னு முத்து கண்டிப்பா நினைச்சிருப்பாரு. இப்போ செல்வம் முத்துவயும்  சரக்கு அடிக்க சொல்றாரு.. முத்து எனக்கு இப்ப வேண்டாம் மீனா வேற வந்து இருக்கா அப்படின்னு சொல்லிட்டு சாப்பிட போயிடறாங்க .ஆனா   முத்து மீனா முகமே வாடி போச்சு.. இப்போ சாப்பிடற இடத்துல செல்வத்தோட சொந்தக்காரங்க ரெண்டு பேரு சாப்பாடு சரியில்லைன்னு பிரச்சனையை கிளப்புறாங்க.. போதையில தடுமாறிக்கிட்டே வர செல்வம்  சாப்பாடு நல்லா தானே இருக்கு அப்படின்னு சொல்றாரு இதுல இவங்களுக்குள்ள வாக்குவாதம் ஏற்படுது.. ஒரு கட்டத்துக்கு மேல ஏற்பட்ட  செல்வத்தோட சொந்தக்காரங்க செல்வத்தை  அடிச்சிடுறாங்க.. யார் மேலடா கை வைக்கிறீங்க அப்படின்னா முத்து பளார்னு செல்வத்தோட சொந்தக்காரங்கள அறைஞ்சுடுறாரு .. இப்போ அறுபதாம் கல்யாணம் கலவர கல்யாணம் மாறி போய் இருக்கு இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சிருக்காங்க..

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்