பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து, கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். இவரது இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில வாரங்களில் வெளியேற்றப்பட்ட ரேஷ்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘இந்த நேரத்தில் கவின் செய்தது சரி தான் என்றும், என்னுடைய ஆதரவு எப்போதும் கவினுக்குஇருக்கும்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.
unknown node