சிறகடிக்க ஆசை சீரியல்.. செல்வத்திற்கு பணம் கொடுக்க மறுக்கும் மீனா..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 12]எபிசோடில் முத்து மீனா விடம் செல்வத்திற்கு பணம் கேட்கிறார். ஆனால் மீனா கொடுக்க  மறுக்கிறார்.

muthu,meena (11) (1)

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 12]எபிசோடில் முத்து மீனா விடம் செல்வத்திற்கு பணம் கேட்கிறார். ஆனால் மீனா கொடுக்க  மறுக்கிறார்.

செல்வம் முத்துவிடம் தன் அப்பாவிற்கு அறுவதாம் கல்யாணம் செய்ய முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். முத்துவும்  செல்வத்தை சமாளிக்கிற மாதிரி பேசுறாரு.. அறுவதாம் கல்யாணம்  வாழ்க்கையில் ஒரு தடவை தான் நடக்கும் எல்லாமே விதின்னு போயிட்டா வாழ்க்கை மாறாத டா நீ ஆக வேண்டிய வேலையை பாரு உனக்கு பணம் கிடைக்கும் அப்படின்னு சொல்றாரு. இப்போ மனோஜ் ஷோரூம்ல சோகமா உக்காந்துட்டு இருக்காரு .ரோகிணி கிட்ட ஒரு செக்யூரிட்டி வேணும்ன்னு சொல்லிட்டு இருக்காரு . இப்போ வாட்டசாட்டம பவுன்சர் மாதிரி ஒருத்தர் வராரு .மனோஜ் கிட்ட வந்து சார் செக்யூரிட்டிக்கு ஆள் வேணும்னு சொல்லி இருந்தாங்க அப்படின்னு கேக்குறாரு. ரோகினி மனோஜ் கிட்ட இவர் பார்க்க பவுன்சர் மாதிரி இருக்கருன்னு   சொல்லுறாங்க .

அவரைப் பத்தி எல்லாமே விசாரிக்கிறாங்க. அதுக்கு அவரு முன்னாடி நான் ஒரு தொழிலை அதிபர் கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தேன். மனோஜ் கேட்கிறாரு என்ன படிச்சிருக்க .. டிகிரி முடுச்சுருக்கேன்னு  சொல்றாரு. அப்புறம் சண்டை போடத் தெரியுமா.. உன் வெயிட் என்ன .. இதுக்கு ரோகிணி ஏன் மிலிட்டரிக்கு சேர்த்து விட போறியா அப்படின்னு கேக்குறாங்க. இப்போ மனோஜ் அவர்கிட்ட வேலைய பத்தி டீடைல்ஸ் எல்லாம் சொல்றாரு சொல்லிட்டு சரி நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க . அதுக்கு அந்த பவுன்சர் ஒரு லிஸ்டே சொல்றாரு ..சம்பளமும் சாப்பாடும்தான்  சாப்பாடு எல்லாமே அசைவமா இருக்குற மாதிரி சொல்றாரு.. இதை கேட்ட மனோஜ் சாப்பாடு சம்பளத்தை விட அதிகமா இருக்குதுன்னு சொல்றாரு.

MANOJ,ROHINI (6) (1)

எல்லாம் சரிதான் ஆனா பிரச்சனை வந்தா இந்த மாதிரி ஆளுங்களாம் ஓடிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.இதை கேட்டா பவுன்சர்  மனோஜ எழுந்திரிக்க சொல்லுறாரு . இப்போ மனோஜை ஒரே தூக்கா தூக்கி சுத்த ஆரம்பிச்சிட்டாரு.. மனோஜ் விடியா விடியான்னு பயந்து போய் கத்துறாரு.. இப்போ இறக்கி விட்டதுக்கு அப்புறம் நான் உங்க பின்னாடி நின்னா யாரு உங்க பக்கமே வர மாட்டாங்க அப்படின்னு அந்த பவுன்சர் சொல்றாரு.இப்போ மீனா மாடில துணி காய போட்டுட்டு இருக்காங்க .முத்து செல்வத்துக்காக பேச வராரு..  செல்வத்தோட அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ண போறானாம்  அதுக்கு பணம் தேவைப்படுது நானும் தரேன்னு சொல்லிட்டேன் அப்படின்னு சொல்றாரு . மீனாவுக்கு கோவம் வந்துருது.

இந்த கல்லெல்லாம் அடுக்கி வச்சது அழகு பார்க்கவா ரூம் கட்டணும்னு  தானே அதுக்காகத்தானே பணம் சேர்த்து வச்சிருக்கோம்  அதை எப்படி கொடுக்க முடியும்.ஒரு கட்டத்துல முத்துவுக்கு  கோவம் வருது .. நான் சம்பாதித்த காசு அது அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு ..மீனாவும் அதுல ஏன் பங்கும் இருக்குனு  சொல்லுறாங்க .. அப்போ  என்னோட பங்கு 50,000 குடுன்னு முத்து  கேக்குறாரு . அதெல்லாம் கொடுக்க முடியாதுன்னு மீனா சொல்லிடுறாங்க.. முத்து இப்ப கோவமா கிளம்பி போயிடறாரு..  கார் செட்டில   செல்வத்தை தவிர மத்த எல்லா பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்க கிட்ட பணம் கேட்கிறாரு ..

அவங்க எல்லாருமே எங்க கிட்ட பணம் இல்லடா நீ தானே குடுக்குறன்னு சொன்ன இப்ப என்னாச்சு அப்படின்னு கேக்குறாங்க.பணமெல்லாம் இருக்குடா ஆனா மீனா கொடுக்க மாட்டுற ..  கல்யாணம் பண்ணதே தப்பா ஆயிடுச்சு அப்படின்னு  புலம்புறாரு.. இத கேட்ட மத்த எல்லாருமே கல்யாணம் பண்ணிட்டா அப்படி தான்பா ஒவ்வொன்னுக்கும் அவங்க கிட்ட பர்மிஷன் கேட்கிற மாதிரி இருக்கும் .செல்வம் வேற நம்பிக்கைல சுத்திட்டு இருக்கிறான் அவனுக்கு என்ன பதில் சொல்ல போறேன்னு கேக்குறாங்க.. முத்து யோசிச்சுகிட்டே நிக்கிறாரு..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்