மிக்ஜம் புயல் தந்த வலி...ரூ.10 லட்சம் வழங்கிய விஷ்ணு விஷால்.!

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த

Vishnu Vishal

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர்கள்  சூர்யா, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்குப் பிறகு, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

இதற்கான காசோலையை விஷ்ணு விஷால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம்  வழங்கினார். இதை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களில் ஒருவராக விஷ்ணு விஷாலும் அந்த வலியை அனுப வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

அவர் தனது வீட்டுப் பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் தான் சிக்கி தவிப்பதாக தனது X  தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் இவ்வாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, தமிழக அரசு அலர்ட் செய்திருந்த மீட்பு பணியாளர்கள் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். அவருடன் பாலிவுட் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டார்.

10 நிமிட குறும்படம் இருக்கு! அது தான் LCU-வின் தொடக்கம்- நடிகர் நரேன்!

மீட்புப் பணியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் மீட்பு பணிக்கு உதவிய தமிழக அரசு குறித்தும் , அந்த நேரத்தில் தனக்கு உதவிய நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, தமிழ் சினிமா நடிகர்கள் சூர்யா, ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் மற்றும் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் என சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.