உலக குழந்தைகள் னால அமைப்பான யுனிசெப் ( UNICEF – United Nations International Children’s Emergency Fund ) குழைந்தைகளுக்கான நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் இந்திய நல்லெண்ண தூதராக தமிழ் சினிமா நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது நிறைய கருத்துக்களை முன் வைத்தார். அப்போது, ‘ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கையில், அதனை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் தற்போது தேவை. எனவும், திரைப்படங்களை சீரியஸாக எடுத்து கொன்று, அதனை பின்பற்றக்கூடாது அது வெறும் கற்பனையே என தெரிவித்தார்.
unknown nodeநடிகர் அஜித் எனக்கு ரெம்ப பிடிக்கும். அவர்தான் சூப்பர் ஸ்டார். நேர்கொண்டபார்வை திரைப்படம் போல அவர் அடுத்தடுத்து நல்ல படங்கள் செய்ய வேண்டும் எனவும் நடிகை திரிஷா குறிப்பிட்டார்.
தற்போது சுகாதாரம் தேவையான ஒன்று அதற்கான விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. கிராமப்புற பெண்களிடையே சுகாதார விழிப்புணர்வு தற்போது அதிகமாகி வருகிறது.