தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் ! உயர்நீதிமன்றத்தில் விஷால் வழக்கு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  விஷால் உள்ளார்.தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இவர் மீது ஒரு தரப்பினர் பல குற்றங்களை கூறி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  விஷால் உள்ளார்.தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இவர் மீது ஒரு தரப்பினர் பல குற்றங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியில் உள்ள அனைவரும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும்  ஒரு சிறப்பு அதிகாரியை அரசு  நியமித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரி மூலம்  தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை பார்த்து அறிவித்துள்ளனர்.

தற்போது  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சங்க தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மேலும் எந்த முறைகேடும் நடைபெறாத நிலையில், தனிஅதிகாரி நியமித்தது சட்டப்படி தவறு என கூறியுள்ளார்.இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.