கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடலின் பாடலாசிரியர் காலமானார்!

Default Image

முத்து விஜயன் தமிழ் சினிமாவின் பிரபலமான பாடலாசிரியரும், உதவி இயக்குநருமாவார். இவர் இதுவரை 800-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் முதன்முதலில் மேகமாய் வந்து போகிறாய் என்ற பாடலை எழுதியுள்ளார். அதன் பின் இவர் எழுதிய, கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், முத்துவிஜயன் மஞ்சள் நோயால்  பாதிக்கப்பட்டு, கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் காலமானார். சென்னையில் உள்ள வளசரவாக்கம் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்