நடிகர் மாதவன் சுதந்திர தினம் ,ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டம் ஆகிய மூன்றுக்கும் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படமும் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ஒருவர் மாதவனிடம் ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்வியில்”உங்கள் பின்னால் இருக்கும் இந்து கடவுள் பக்கத்தில் ஒருசிலுவைஉள்ளது. ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்து படங்கள் உள்ளதா ? நீங்கள் நடத்துவது எல்லாம் ஒரு போலி நாடகம் என பதிவிட்டு இருந்தார்.
unknown nodeஇதற்கு பதிலளித்த மாதவன் உங்களைப் போன்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அந்த படத்தில் சிலுவை பக்கத்தில் ஒரு பொற்கோவிலின் சிலையை நீங்கள் பார்க்க மறந்து விட்டீர்கள்.அதை பார்த்து இருந்தால் நான் சீக்கிய மதத்துக்கு மாறிவிட்டேன் என கேள்வி கேட்டு இருப்பீர்கள்.
unknown nodeஅதில் உள்ள பாதி பொருள்கள் எனக்கு பரிசாக வந்தது என் சிறுவயதில் இருந்துஎம் மதமும் சம்மதம்என்ற கருத்து கற்று கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே எல்லா மதத்தையும் என் மதத்தைப் போல மதிப்பேன். இந்த உலகத்தில் முக்கியமானது அன்பு . அந்த அன்பை நான் உங்களுக்கு தருகிறேன் என பதிவிட்டு இருந்தார்.