கே.ஜி.எப் நடிகர் வீட்டு வாடகை தராததால் வீட்டை விட்டு காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு

This news gives information about The court ordered to vacate the house because the KGF actor did not rent housing-KGF nadikar

தங்கி இருக்கும் வீட்டிற்கு பல லட்சம் ரூபாய் வாடகை தரவும் .அந்த வாடகையை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யவும் என வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் யஷ். இவர் நடித்து சமீபத்தில் வெளியான கே.ஜி.எப். படம் ஐந்து மொழிகளில் வெளியாகி வசூல் பல  சாதனை படைத்தது.

நடிகர் யஷ் பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் உள்ள ஒரு  வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கு மாதம் ரூ 40 ஆயிரம் வாடகை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் யஷ் தங்கி இருக்கும் வீட்டிற்கு பல லட்சம் ரூபாய் வாடகை தரவும் . அந்த வாடகையை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யவும் என வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.

இதனால் வீட்டு உரிமையாளருக்கும் , நடிகர் யஷ்சுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் நிதிமன்றத்தில் யஷ் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகர் வீட்டை விட்டு காலி செய்ய உத்தரவு விட்டது .இந்த வழக்கை எதிர்த்து யஷ்சின் தாயார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்தங்கள் சொந்தமாக வீடு கட்டிவருவதால் 6 மாதம் இந்த வீட்டில் தங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் வீட்டு உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு நீதிமன்றம் 2 மாதங்கள் மட்டும் தங்கவும் மே மாதம் 31-ந் தேதிக்குள் வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.