அந்த இரண்டு நபர்களை பார்த்து ஷாக்கான சூர்யா.! வெளியான வைரல் வீடியோ இதோ…

Default Image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் “ராக்கெட்ரி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தமிழ் சூர்யாவும், இந்தியில்ஷாருக்கானும் சம்பளமே வாங்காமல் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். இன்னும் சில நாள்களில் படம் வெளியாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த நிலையில், “ராக்கெட்ரி” படத்தின் படப்பிடிப்பின் போது, சூர்யா தனது ரோலில் நடிப்பதற்காக செட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நடிகர் மாதவனுடன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனும் இருந்துள்ளார்.

இரண்டு பெரும் ஒரே மாதிரி இருந்ததால், யார் மாதவன் என்று புரியாமல் சூர்யா ஒரு நிமிடம் அதிர்ச்சியாக நின்றுள்ளார். இதனை பார்த்த மாதவன் தான் என்பதை அவரே அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அச்சு அசலாக நம்பி நாராயணனாக மாறி இருந்த மாதவனை பார்த்து சூர்யா தலையில் கை வைத்து அதிர்ச்சியான அந்த வீடியோவை மாதவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்