“சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறியது” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி..!!

Default Image

சிவகார்த்திகேயன் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் ‘சீமராஜா’ படம் வெளியானது. சமந்தா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். பொன்ராம் இயக்க, டி.இமான் இசையமைத்தார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்தார்.

Image result for சீமராஜா

‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்தை, எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில், ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா.

இன்னொரு படத்தை, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் இதில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கிறார். ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு டி.இமான் மற்றும் அனிருத் இசையமைத்து வந்த நிலையில், முதன்முறையாக இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறப்போகும் ஓப்பனிங் பாடலுக்கான இசையை, சிவகார்த்திகேயனிடம் போட்டுக் காண்பித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Image result for ஏ.ஆர்.ரஹ்மானுக்கு

அதைக்கேட்டு மகிழ்ந்த சிவகார்த்திகேயன், ‘இந்தப் பாடலை நீங்களே பாடினால் நன்றாக இருக்குமே…’ என்று ஆசைப்பட, அதை நிறைவேற்றி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.இதை தொடர்ந்து உற்சாகம் அடைந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறினார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்