சிறகடிக்க ஆசை சீரியல் -காத்து வாக்குல ரெண்டு காதலா?.. ரவியின் பரிதாபமான நிலை..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 1] எபிசோடில் ரவி -ஸ்ருதி- நீத்து போலீஸிடம் மாட்டிக் கொண்டனர்.

shuruthi,Ravi (2) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 1] எபிசோடில் ரவி -ஸ்ருதி- நீது போலீஸிடம் மாட்டிக் கொண்டனர்.

ரவியின் பரிதாபமான நிலை ;

முத்து அந்த பிஏவை பத்தி அண்ணாமலை கிட்ட சொல்லிட்டு இருக்காரு.. அப்பா ஒரு நாளு அவன் என் கார்ல வரும்போது ஒரு பொண்ண பத்தி தப்பு தப்பா பேசிட்டு வந்தான் அவன அடிச்சு விரட்டி விட்டேன் ..அப்புறம் ஒரு நாளு வயசான பாட்டியை ஆக்சிடென்ட் பண்ணிட்டு போனான் நான் போலீஸ்ல புடிச்சு கொடுத்தேன் இந்த கடுப்புல தான் அவன் என்னை மனோஜ் கிட்ட மாட்டிவிட்டு இருக்கிறான்.. ஆனா நான் பண்ணதுக்கு இந்த ஓடுகாலிய  ஏன் மெரட்டரான்னு தெரியல. எனக்கு வர்ற பிரச்சனை எல்லாம் இவனால தானே அப்படின்னு சொல்றாரு மனோஜ் .எனக்கு என்னமோ வேற காரணம் இருக்குமோன்னு தோணுது அவன அடிச்சு கேட்டா சொல்லிருவான்  அப்படின்னு முத்து சொல்றாரு. இப்போ அண்ணாமலை நீ பேசாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருடா..

உடனே ரோகினி அதெல்லாம் வேணாம் தேவையில்லாமல் போலீஸ் ஷோரூம் எல்லாம் வருவாங்க . உடனே முத்துக்கு சந்தேகம் அதிகமாகிறது.. இப்போ ரவியும் ஷாப்பிங் முடிச்சு பைக்ல வந்துட்டு இருக்காங்க வரும்போது ஸ்ருதி நீ சீக்கிரமாவே ஷாப்பிங் முடிச்சிட்டியே அப்படின்னு சொல்றாரு.. அதுக்கு ஸ்ருதி குதுர்க்கமாகவே பதில் சொல்லிட்டு வராங்க.. அவங்க வர்ற வழியிலேயே நீத்து ஓட காரு ரிப்பேர் ஆகி நிக்குது. இப்போ கரெக்டா ரவியோட பைக் வரத பார்த்து லிப்ட் கேக்குறாங்க என்னோட காரு ரிப்பேர் ஆயிருச்சு .அதுக்கு ஸ்ருதி  சொல்றாங்க  கேப் புக் பண்ண வேண்டியதுதானே .. ட்ரை பண்ணேன் ஆனா கிடைக்கலன்னு நீத்து சொல்லுறாங்க  எனக்கும் டைம் ஆச்சு கொஞ்சம் லிப்ட் கொடுக்கிறீர்களானு  கேட்டு அவங்க வண்டியில் ஏறி போயிட்டு இருக்காங்க ..போற வழியிலேயே போலீஸ்  அவங்கள புடிச்சிராங்க ..

என்னையா காத்து வாக்குல ரெண்டுங்குற  மாதிரி வர்ற இன்னும் ரெண்டு ஏத்திக்கலாம்ல அப்படின்னு சொல்றாரு என்னமா உன் புருஷன் கிட்ட சொல்ல மாட்டியா அப்படின்னு நீத்துவ  பார்த்து சொல்ல சுருதி ரவியை முறைக்கிறாங்க.. சார் இவங்க என்னோட பாஸ்.. வர வழியில கார்  ரிப்பேர் ஆயிடுச்சு சார் நான் வேணா பைன் கட்டிடறேன் அப்படின்னு நீத்து  சொல்றாங்க. இப்போ பைன் கட்டிட்டு போலீஸ பார்த்து சார் என்னை நீங்களே இறக்கிவிட்டுடுங்க ஏன்னா மறுபடியும் லிப்ட் கேட்டு நான் போனா மறுபடியும் பைன் கட்டணம்னு   சொல்ல போலீஸ் வேற வழியில்லாமல் ஏத்திட்டு போறாங்க .இதை பார்த்தா ஸ்ருதி என்னடா இவ சரியான லூசா இருப்பா போல அப்படின்னு ரவி கிட்ட சொல்லிட்டு இருக்காங்க. இப்ப மொட்டை மாடியில மனோஜ் நின்னுட்டு இருக்காரு.

Annamalai (8) (1)

கொலு பூஜைக்கு தயாராகும் குடும்பம் ;

 

பின்னாடியே முத்து வந்து பயமுறுத்துறாரு  எப்ப பார்த்தாலும் நீ ஏன்டா அடிச்சிட்டே இருக்குற அப்படின்னு சொல்ல நான் உன்னை அடிப்பேன் ஆனா மத்தவங்கள அடிக்க விடமாட்டேன் டா அப்படின்னு பாசமா பேசிட்டு இருக்காரு முத்து.  ரவியும் வந்துட்டாரு நாளைக்கு நம்ம வீட்ல கொலு  பூஜை இருக்கு யாரெல்லாம் என்ன பண்ண போறீங்கன்னு கேக்குறாரு.. அதுக்கு மனோஜ்  சொல்றாரு நான் ரோகிணி கேட்டு சொல்றேன் . முத்து சொல்றாரு வீட்டுக்கு வந்த எல்லாரையும் நான் அவங்க வீட்டிலேயே ரிட்டர்ன் கொண்டு போய் விட போறேன்.  ரவி  அண்ணிக்கு  ஹெல்ப் பண்ண போறேன்னு சொல்லுறாரு . இப்போ கிச்சன்ல மீனாவும் ஸ்ருதியும் பூஜைக்கு தேவையானதை   லிஸ்ட் போட்டு இருகாங்க ..

இதை பார்த்து ரோகினி நீங்க ரெண்டு பேரும் எப்ப பேசுனீங்க .. இல்ல ரோகிணி நாளைக்கு வீட்ல பூஜை இருக்கு இல்ல அதனால தான் மத்தபடி நான் எதையும் மறக்கல அப்படின்னு ஸ்ருதி  சொல்லி சமாளிக்கிறாங்க. இதுக்கேத்த மாதிரி மீனாவும் நடிக்க ஆரம்பிக்கிறாங்க நானும் எதையும் மறக்கல அப்படின்னு.. ஆனாலும் ரோகினிக்கு ஏதோ ஒரு சந்தேகமாக இருக்கு இதோட இன்னைக்கு  எபிசோட  முடிச்சு இருக்காங்க. நாளைக்கு ப்ரோமோல கொலு   பூஜையில விஜயா பாட்டு பாடிட்டு இருக்காங்க ..எல்லாருமே காத மூடாத குறையா முகம் சுளிச்சு  விஜயாவே பாத்துட்டு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்