பாலியல் வழக்கு: தலைமறைவான பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் கைது.!

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவான பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

johnny master

ஹைதராபாத் : தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகார் கூறினார்.

இந்த புகாரின் பேரில், ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் பரவியது. உடனே, ஜானி மாஸ்டர் தலைமறைவானார்.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது, போக்சோ வழக்கும் பாய்ந்தது. இந்நிலையில், தலைமறைவான ஜானி மாஸ்டரை கைது செய்ய நான்கு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டது.

அவரை தேடும் பணியில் தனிப்படைகள் ஈடுபட்டனர். இதனிடையே அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி, ஹைதராபாத் போலீசார் பெங்களூருவில் வைத்து அவரை கைது செய்த நிலையில், அங்கிருந்து ஹைதராபாத் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கு படங்களில் பணியாற்ற ஜானி மாஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல் ஜானி மாஸ்டர் மீது புகார் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்