சிறகடிக்க ஆசை சீரியலில் .. மனோஜ்க்கு லெட்டர் கொடுத்தது BA வா ?.. கண்டறியும் ரோகினி..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 11] எபிசோட் மனோஜ்க்கு லெட்டர் கொடுத்தது யார் என ரோகினி அறிந்து கொண்டார்.

Rohini,Vijaya (1) (1) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 11] எபிசோட் மனோஜ்க்கு லெட்டர் கொடுத்தது யார் என ரோகினி அறிந்து கொண்டார்.

விஜயாவும் மனோஜும் மாடியில் லெட்டரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் விஜயாவிடம் கற்பனை கதையாக அவரே தயாரித்து சொல்கிறார். அம்மா நம்ம வீட்டுக்கு திருடன் இப்ப வந்துட்டான் திருடனைப் பார்த்த ஷாக்ல உங்களுக்கு நெஞ்சு வலி வந்துருச்சு அந்தத் திருடன் ரோகிணியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்னுட்டா அதை பார்த்த நான் தற்கொலை பண்ணிட்டேன் இப்படியெல்லாம் நடந்தா எப்படி இருக்கும் அப்படின்னு  கேக்க விஜயா மனோஜ அடி அடின்னு அடிக்கிறாங்க நீ ஒரு படிச்ச முட்டாள் டா அப்படின்னு சொல்றாங்க .இப்ப பேசிட்டு இருக்கும் போதே மாடிக்கு  யாரோ வர்ற மாதிரி சத்தம் கேட்குது விஜயா மனோஜ் கிட்ட டேய் யாரோ வர மாதிரி இருக்கு முதல்ல அந்த கட்டையை எடுன்னு சொல்றாங்க..

ஆனா  ரோகிணி தான் வராங்க.. ரெண்டு பேரும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க தூக்கம் வரல ரோகிணி அப்படின்னு மனோஜ் சொல்றாரு. சொல்லிட்டு அந்த லெட்டர் எடுத்து கொடுக்கிறார் அதை படிச்ச ரோகிணி இப்படி எல்லாம் ஒன்னும் நடக்கறதுக்கு வாய்ப்பு இல்ல நீங்க போய் தூங்குங்க அதெல்லாம் நடக்காது ஆண்ட்டி அப்படின்னு சொல்லி சமாளிச்சிறாங்க. ஆனா ரோகினிக்கு இந்த லெட்டரை அந்த பி ஏ  தான் கொடுத்து இருப்பான்னு  சந்தேகம் வந்து இருக்கு. இப்போ காலையில ஆனதும் ரோகிணி வித்யாவை கூப்பிட்டு வாடகை வீடு பார்க்க போறாங்க அங்கே ஹவுஸ் ஓனர் ஃபர்ஸ்ட் அம்மாவும் பொண்ணுக்கும்  வீடு குடுக்க மாட்டேன்னு சொல்றாரு.

muthu,meena (10) (1)

எப்படியோ ரோகினி சமாளிச்சு வீட்டுக்கு அட்வான்ஸ் தரேன்னு சொல்லிடுறாங்க இதெல்லாம் பார்த்த வித்யா எப்பிடி இவ்வளவு பிரச்சனையும் தலையில தூக்கி வெச்சிட்டு இருக்குற என்னால எல்லாம் இப்படி எல்லாம் முடியாது அப்படின்னு சொல்றாங்க. இப்ப மீனா அந்த செருப்பு தைக்கிற தாத்தா பாட்டிக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்குறாங்க அவங்களும் மீனா பார்த்து வாம்மா மகராசி அப்படின்னு வரவேற்கிறாங்க ..எங்களுக்கு வேலை இப்பதாமா வந்துச்சு அப்படின்னு சாப்பாட்டுக்கு உண்டான காச குடுக்குறாங்க அந்த வேலையை கொடுத்தது யாருன்னா நம்ம முத்து தான் ஓரமா நின்னுட்டு இருக்காரு.. இப்ப மீனாவும் முத்துவும் தான் புருஷன் பொண்டாட்டி தானு  அவங்ககிட்ட காட்டிகாமலே பேசிக்கிறாங்க.

முத்து ஓட  பொண்டாட்டி தான் மீனான்னு   தெரியாமல் அந்த தாத்தா பாட்டி மீனவ புகழ்ந்து தள்றாங்க.. இப்போ முத்து கார் செட்டுக்கு போறாரு அங்க செல்வம் போதையில் படுத்து இருக்கிறார். முத்து வந்ததும் புலம்ப ஆரம்பிச்சிட்டாரு போன வாரம் எங்க பெரியப்பா  அறுவதாம்  கல்யாணத்துக்கு பெரியப்பா பசங்க  நல்லா   ஏற்பாடு பண்ணி இருந்தாங்க நான் எங்க அப்பா கல்யாணத்துக்கு பண்ண முடியாம நிக்கிறேன்  முத்து எங்கிட்ட காசு இல்லடா நம்மள மாதிரி இருக்குறவங்க எல்லாம் ஆசைப்படுறதோட நிறுத்திக்கணும் போல அப்படின்னு புலம்புறாரு .இத கேட்ட முத்து நீ கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்றாரு..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்