ரேணுகாசாமி கொலை வழக்கு: சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை – ரம்யா கருத்து.!

Darshan - Divya Spandana

பெங்களூரு : கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டது குறித்து குத்து பட நடிகை ரம்யா கருத்து தெரிவித்துள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கில்  நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான ரேணுகா சுவாமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தர்ஷன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கன்னட நடிகர் தர்ஷன் தூக்குதீப் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா கருத்து தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “இங்கே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என யாருமில்லை. சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ரேணுகா சுவாமிக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை, யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. எக்காரணம் கொண்டும் மக்களை அடிக்கவோ கொல்லவோ முயற்சிக்காதீர்கள். நீதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற குழப்பம் இருந்தாலும், புகார் அளித்தாலே போதும். அதே பதிவில், கர்நாடக காவல்துறை அதிகாரிகளின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

கடமையைச் செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டும் மரியாதையும். இது நன்றியற்ற வேலை மற்றும் அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், சட்டம் மற்றும் நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்