தமிழிலும், தெலுங்கிலும் வலுக்கும் எதிர்ப்பு.! நாளைக்கு பாட்டுக்கு ‘ஊ’ சொல்லுவாங்களா ‘ஊஊ’ சொல்வாங்களா?!

Default Image

தமிழகம், மற்றும் ஆந்திராவில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாளை ரிலீஸ் ஆக உள்ள அந்த படத்தில் பாடல் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் தமிழில் வெளியிட உள்ளது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழில் ஊ சொல்றியா மாமா எனும் பாடலுக்கும், ஊ அண்டே மாமா எனும் தெலுங்கு பாடலுக்கும் தமிழிலும் தெலுங்கிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

அந்த பாடலில் ( தமிழிலும் , தெலுங்கிலும் ) வரிகள் ஆண்களை மிகவும் இழிவாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளது என தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் அமைப்பும், ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் அமைப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன.

ஆனால், இந்த பாடல், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இளைஞர்கள் மத்தியில் இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா ஆட, ஆண்ட்ரியா பாட நாளை புஷ்பாவின் அந்த பாடல் காட்சி தருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்