ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட் எப்போ..? செல்வராகவன் சொன்ன குட் நியூஸ்.!

Default Image

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரெமோ சென், உள்ளிட்டோர் பலர் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் எனவும், அதில் தனுஷ் கதாநாயகனாக நடிப்பார் எனவும் இயக்குனர் செல்வராகவன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து படம் எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், படத்திற்கான அறிவிப்பு வெளியாகி 1 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் படத்தின் அப்டேட் எதும் வெளியாகவில்லை. இதனால் ஏதேனும் அப்டேட் வருமா..? எனவும் ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக காலந்து கொண்ட செல்வராகவன் “ஆயிரத்தில் ஒருவன் 2 ” குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்  அடுத்த ஒரு மாதத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்