சிறகடிக்க ஆசை சீரியல் -மும்பை பிசினஸ் மேனிடம் உண்மையை உடைத்தார் முத்து..

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 26] எபிசோடில் ரோகினி முத்து பாக்கெட்டில் இருந்து மொபைலை திருடுகிறார்..

Rohini (9) (1)

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 26] எபிசோடில் ரோகினி முத்து பாக்கெட்டில் இருந்து மொபைலை திருடுகிறார்..

முத்து ஃபுல்லா குடிச்சிட்டு பிசினஸ்மேன் கூட பேசிட்டு இருக்காரு.. அப்போ கண்ணதாசன் பாட்டெல்லாம் பாடி எல்லாரும் பயங்கரமா டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க.. அந்த பிசினஸ் மேன்  முத்துக்கிட்ட எனக்கும் கண்ணதாசன் தான் ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்றாரு.. சூப்பரா பாட்டு பாடி அசத்திட்டீங்க.. கண்ணதாசன் பொய் சொல்லவே மாட்டாரு அதே போல அவோரோட ரசிகர்களும்  பொய்யே சொல்ல மாட்டாங்க அப்படின்னு சொல்றாரு.. இதை கேட்டா முத்து உடைந்து போய் உட்காருராரு.. என்ன ஆச்சுன்னு கேட்க.. சார் என்கிட்ட ரெண்டு கார் தான் இருக்கு 50  இல்ல.. என் அண்ணன் முதல் தடவை என்கிட்ட  ஒரு உதவி கேட்டான்  அதனால நாங்க பொய் சொல்லிட்டோம்  அப்படின்னு சொல்லிட்டு எல்லா உண்மையும் போட்டு உடைச்சிடுறாரு..

பிசினஸ் மேன் மனோஜ் கிட்ட  ஏன் பொய் சொன்னிங்க  அப்படின்னு கேட்க.. அதுக்கு முத்து  சொல்றாரு ..என் அண்ணனுக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய தொழிலதிபரா ஆகணும்னு ஆசை அதனால தான் சார் பொய் சொல்லிட்டான் . ஆனா ரொம்ப திறமையானவன் அப்படின்னு சொல்ல உடனே அந்த பிசினஸ்மேன் முத்துவை  பாராட்டுறாரு.. உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு முத்து உங்களுக்காக மனோஜ்க்கு டீலர்  ஷிப் கொடுக்கிறேன் அப்படின்னு சொல்றாரு.. சொல்லிட்டு  பிளைட்டிக்கு  டைம்ஆச்சுன்னு கிளம்புறாரு  . இப்போ மனோஜ் முத்துவ  ஏன்டா இப்படி பண்ணுன அப்படின்னு கேட்க அதுக்கு ரவி சொல்கிறார் உனக்கு நல்லது தானடா பண்ணி இருக்கான்.. அதோட மனோஜ் அமைதியா ஆயிடுறாரு .. இப்போ எல்லாருமே வெளியில  தடுமாறி  வராங்க .முத்துவை பார்த்த மீனாவுக்கு கோவம் வருது நான் சொல்லியும் மீறி நீங்க குடிச்சிட்டீங்களான்னு  கேக்குறாங்க.

vijaya ,manoj (1) (1)

நான் குடிச்சதுல ஒரு நல்லது நடந்திருக்கு மீனு சொல்றாரு. அந்த பிசினஸ் மேன் கிட்ட நான் எல்லா உண்மையும் சொல்லிட்டேன் அவரும் என்னோட நேர்மைக்காக இந்த டிலர்ஷிப்பை மனோஜ்க்கு கொடுக்கிறேன் சொல்லிட்டாருன்னு சொல்ல மீனா சந்தோஷப்படுறாங்க.. இப்ப எல்லாருமே ஒரே லிப்டுல  போறாங்க அந்த சைடு கேப்ல  ரோகினி முத்துவோட செல்ல எடுத்து மனோஜ் பாக்கெட்டில் வைக்கிறாங்க .. இப்போ வீட்டுக்கு போனதும் அண்ணாமலை கதவ தொறக்குறாரு.. மூணு பேருமே பார்த்துட்டு என்ன குடிச்சிருக்கீங்களா ன்னு கேக்குறாங்க. இப்ப விஜயா  அதுக்கும் முத்துவை  திட்டுறாங்க.. நீ தாண்டா எல்லாரையுமே குடிக்க வச்சிருப்பேன்னு சொல்றாங்க. இப்ப அண்ணாமலை சொல்றாரு நீங்க இன்னைக்கு வீட்டுக்குள்ள வரக்கூடாது வெளியிலே படுத்துடுங்க அப்படின்னு சொல்றாரு இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சிருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்