மதுரை அஜித் ரசிகர்கள் சிலர், அஜித்குமாரை பகத் சிங் போல சித்தரித்து வலிமையையும், வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு கட்டவுட் வைத்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்துவிட்டவர் நடிகர் அஜித். இவரது ரசிகர்கள் இவர் படம் வெளிவந்தாலே போதும் என கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் தனது ரசிகர் மன்றங்களை களைத்து கிட்டத்தட்ட 10 வருடங்காகிவிட்டது.
இருந்தும் தற்போது வரையில் அஜித் திரைப்படம் வெளியானால் திரையரங்கில் திருவிழா கோலம் தான். கட்டவுட், போஸ்டர், முதல் நாள் முதல் காட்சி என அதகளப்படுத்திவிடுவர்.
unknown nodeஅதே போல சில ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறி தங்களது அன்பை வெளிக்காட்டுவதாக எண்ணி சர்ச்சை போஸ்டர்களை ஒட்டிவிடுவர். இதனையும் ஒரு காரணமாக எண்ணி தானோ என்னவோ தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார் போலும் அஜித்.
இருந்தாலும், அவரது ரசிகர்கள் விடுவதாயில்லை. மதுரையில், அண்மையில் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டு திரையுலகினர் அதிர்ச்சியடைந்துவிட்டனர். அதில் அஜித்குமாரை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரித்து, அதில், ‘வருடங்கள் கடந்தாலும் வலிமையையும், வரலாறும் அழியாது.’ என வாசகம் அச்சிட்டுள்ளனர். அடங்காத அஜித் குரூப்ஸ் – மதுரை. என அதில் போடப்பட்டுள்ளது.