திருவண்ணாமலையில் ரசிகரின் உடலை பார்த்து துக்கம் தாங்காமல்,கதறியழுத நடிகர் கார்த்தி ….

Default Image

திருவண்ணாமலையில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவன்குமார், கார்த்தி மக்கள் நல மன்ற மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்றுமுன் தினம் தாம்பரம் இரும்புலியூரில் நடைபெற்ற கார்விபத்தில் ஜீவன்குமார், அவரது நண்பர் தினேஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் உயிரிழந்த ஜீவன்குமாரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்து ஜீவன்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் , நடிகர் கார்த்தி கதறி அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, பயணத்தைவிட உயிர் முக்கியம் என்றும், இரவு பயணங்களை தயவு செய்து தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்