ஓவியா பற்றிய ருசிகர தகவல் வெளியானது !

தமிழ் தொலைகாட்சியில்  பிக்பாஸ்  என்ற நிகழ்ச்சி மூலம் யார் யார் பிரபலம் ஆனார்கள் என்பது நமக்கு தெரியும். அதில் ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஓவியா .

தமிழ் தொலைகாட்சியில்  பிக்பாஸ்என்ற நிகழ்ச்சி மூலம் யார் யார் பிரபலம் ஆனார்கள் என்பது நமக்கு தெரியும். அதில் ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஓவியா .

சின்ன சின்ன குறும்புதனமான செயல், தனக்கு பிடித்ததை மற்றவர்களுக்கு பயப்படாமல் செய்வது என நிகழ்ச்சியில் கலக்கியிருப்பார். ஆனால் நடுவில் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிவிட்டார், இது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

ஆனால் அவர் அதையெல்லாம் மறந்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.அப்போது தொகுப்பாளர் அவரிடம், படங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியால் ரசிகர்களுக்கு ஏன் அவ்வளவு உங்களை பிடிக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ஓவியா, படங்களில் நான் நடிக்கிறேன், ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் நானாக இருந்தேன் நடிக்கவில்லை என்று கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் சூப்பர் பதில் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.