எந்த சூழ்நிலையிலும் இசையை கைவிட மாட்டேன் : நடிகை ஸ்ருதிஹாசன்

Default Image

நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசனின் மகளாவார். இவர் நடிகை, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஆனால், அமரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் பீதியில் ஒரு படத்திலும், தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இவர் தனது இசை அனுபவம் குறித்து கூறுகையில், ‘ இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் இசையை கைவிட மாட்டேன். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் போது படங்களில் நடிப்பேன்.’ என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்