நடிங்கர் ஜெய் தமிழ் திரையுலகில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும், பெரிதாக ஜெய்க்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியை எந்த படமும் கொடுக்கவில்லை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்ணி துணிக படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
unknown nodeஇதனை தொடர்ந்து ஜெய் அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள“காபி வித் காதல்”படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇதையும் படியுங்களேன்-பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம்..? லிஸ்ட் இதோ.!
இதற்கிடையில், நடிகை ஜெய்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நடிகர் ஜெய்க்கு அவர்களின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்களாம்.
unknown nodeதிருமணமத்திற்கு ஜெய்யும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தனது நண்பர்களான ‘சென்னை-28’ கேங்கிற்கு பார்ட்டி வைத்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுப்படுகிறது. இது வெறும் வதந்தியை அல்லது உண்மையில் ஜெய்க்கு திருமணம் நடைபெறவுள்ளதா என்பதை ஜெய்யே அறிவித்தால் தான் தெரிய வரும்.