முடிவுக்கு வந்த ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் டைவர்ஸ் பஞ்சாயத்து.!

Aishwarya Rai Abhishek Bachchan

மும்பை : அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து சில காலமாக பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் அபிஷேக் பச்சன். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் விவகாரத்து ஆகிவிட்டதாக பரபரப்பான செய்தி வெளியான வண்ணம் உள்ளது.

ஆம், பாலிவுட்டில் பிரபல ஜோடிகளான அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா அண்மைய காலமாக வெளி இடங்களில் ஒன்றாக காணப்படவில்லை. சமீபத்தில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தால் இந்த விவாகரத்து வதந்தி மேலும் தூண்டப்பட்டது.

திருமணத்தில், அபிஷேக் தனது பெற்றோர், சகோதரி மற்றும் மைத்துனருடன் திருமணத்திற்கு வந்திருந்த நிலையில், மறுபக்கம் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனித்தனியாக விழாவில் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக,    செய்திகளை நெட்டிசன்கள் பரப்ப தொடங்கினர். மேலும் இந்த விவகாரத்தில் இருவரும் அமைதியாக இருப்பதால், இது உண்மையோ என்ற சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் ஒலிம்பிக்ஸை காண பாரிஸ் சென்ற அபிஷேக் பச்சன், செய்தியாளரிடம் திருமண மோதிரத்தை காட்டி, “எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி பற்றி பேச எதுவும் இல்லை. பிரபலங்கள் என்பதால் எங்களை பற்றி இவ்வாறு பேசுகிறார்கள்,  எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவில்லை. இன்னும் திருமண உறவில் இருப்பதாக” விளக்கமளித்தார்.

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இந்த ஜோடி அன்றிலிருந்து ஒன்றாக இருந்து வருகிறது. 2011-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை ஆராத்யாவை பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்